தென்காசியில் சாரல் மழை

தென்காசியில் சாரல் மழை
 தென்காசியில் காலை முதலே சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசியில் காலை முதலே சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது . தொடர்ந்து மிதமான மழை இன்று அதிகாலை முதல் பெய்ய தொடங்கியது. இதனால் வர்த்தக நிறுவனங்களில் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசுகிறது. அந்தப் பகுதியில் செங்கோட்டை, வடகரை, அச்சன்புதூர், குற்றாலம், மேலகரம், தென்காசி, கடையம், புளியரை, உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story