திமுக சார்பில் கல்வி உதவித்தொகை

திமுக சார்பில் கல்வி உதவித்தொகை

 கல்வி உதவித்தொகை

திமுக சார்பில் கட்சியினர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் கட்சியினர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள கட்சியினர் குடும்பத்தை தேர்ந்தெடுத்து, அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, உயிரிழந்த கட்சித் தொண்டர்களின் குடும்ப நிதியுதவி போன்றவை கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. நகரின் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகளின் உயர்கல்வி படிக்கும் வாரிசுகளுக்கு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி தொழிற்கல்வி படிக்கும் 2 பேருக்கும், பட்ட படிப்பு படிக்கும் 3 பேருக்கும் ஆக மொத்தம் 5 பேருக்கு கல்வி உதவி தொகையாக மொத்தம் ரூ.4.50 லட்சம் வழங்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உயிரிழந்த கட்சி தொண்டர்கள் 27 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் என்ஆர்.சங்கர் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரிதி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சித்தார்த், பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், கவுன்சிலர் விநாயகமூர்த்தி உட்பட கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story