அரசு பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை

அரசு பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை

அரசு பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை கலெக்டர் தகவல்

அரசு பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை கலெக்டர் தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சலக வங்கிகளில் தமது பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் ஆதார் எண், வங்கி விவரங்கள், வருமான சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story