மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சேலம் மாநகர துளுவ வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 60 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


சேலம் மாநகர துளுவ வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 60 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சேலம் மாநகர துளுவ வேளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அண்ணாமலையார் நண்பர்கள் குழு இணைந்து 2-ம் ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் செவ்வாய்பேட்டையில் நேற்று நடத்தியது. இதில், சங்க தலைவர் கோபிநாத், செயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் நடந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற 60 மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலையார் நண்பர்கள் குழுவை சேர்ந்த சந்திரசேகர், சண்முகசுந்தரம், முருகவேல், பிரகாஷ், ஆலோசகர் ஜெயபிரகாஷ், ராஜாமணி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story