நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை

மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சமிதா (19). இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது அக்காள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனினும் மாணவிக்கு போதுமான நிதி உதவி இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர்மாநகராட்சி செயற்பொறியாளர்ரும், வன்னியர் நல அறக்கட்டளை கட்டிட நிதிக்குழு தலைவருமான மு.பழனிசாமி, மாணவி சமிதாவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

Tags

Next Story