பள்ளி ஆதார் சிறப்பு முகாம்

பள்ளி ஆதார் சிறப்பு முகாம்

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.


பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுனிகரா துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் 19 ஆதார் கருவிகளைக் கொண்டு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தரவு உள்ளீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தரவு உள்ளீட்டாளர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி வழங்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள முதல் பள்ளிகளில் ஆதார் பதிவு மாற்றம், புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் இம்முகாம் நடைபெறுகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு புதிய பதிவுகள், ஆதார் எண் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம். ஆதார் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது, தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய குழந்தைகளுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படுகிறது.

மேலும், 8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி இச்சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குதல் பணியும் இன்றைய தினம் மேற்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story