சரிவர பஸ்கள் இயக்காததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்!

பழைய கந்தர்வகோட்டையில் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தஞ்சை - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, பழைய கந்தர்வகோட்டையில் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தஞ்சை - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வக்கோட்டையில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் அரசு பஸ்களை நம்பியே கல்வி கற்க சென்று வருகின்றனர். கந்தர்வக்கோட்டையில் தொடர்ந்து அரசு பஸ்கள் சரி வர இயக்கப்படாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதியுற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

Tags

Next Story