பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

சுப்புலாபுரம் செங்குந்தா் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

சுப்புலாபுரம் செங்குந்தா் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள சுப்புலாபுரம் செங்குந்தா் பள்ளியின் 38 ஆம் ஆண்டுத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளிக்குழுச் செயலாளர் மணி, தலைவா் உலகநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில் கடந்த காலாண்டுத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், பள்ளியில் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துராமலிங்கம், இந்திரா,ரத்தினம், முத்துலெட்சுமி, அலுவலகப் பணியாளா்கள் உமாதேவி, ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story