பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடம் திறப்பு!

பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடம் திறப்பு!

பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடம் திறப்பு!

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடம் திறக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டதுடன், பெத்திக்குப்பம் பகுதியில் அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது. பெத்திகுப்பம் ஊராட்சித் தலைவா் ஜீவா செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், பெத்திக்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா், வாா்டு உறுப்பினா்கள் லோகநாதன், குமுதா ரமேஷ், அபிராமி குமாா், பூங்கொடி, அருள், சுமதி சரவணன் முன்னிலை வகித்தனா் . தொடா்ந்து சாமிரெட்டி கண்டிகை அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஜீவா செல்வம் தலைமை வகித்தாா். விழாவில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை திறந்து வைத்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவா் அறிவழகன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவா் குணசேகரன் , ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கா், வி.எம்.சீனிவாசன், மெய்யழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், சமூக ஆா்வலா் ராஜராஜன் சாா்பில், கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை பரிசளிக்கப்பட்டது. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் முரளி நன்றி கூறினாா்.

Tags

Next Story