பள்ளி மாணவி மாயம் -போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம் -போலீஸ் விசாரணை

பைல் படம் 

எருமைப்பட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இவரது மகள் வயது 16.,நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பல இடங்களில் தேடியும் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளிலும் விசாரித்த போதும் கிடைக்கவில்லை மேலும் அன்று பள்ளி விடுமுறை என்று ஆசிரியரும் பள்ளி மாணவிகளும் கூறியதை அடுத்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தரும்படி மனு அளித்ததை அடுத்து எருமைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.எருமைப்பட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story