கடலில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாப சாவு

கடலில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாப சாவு

மாணவி கடலில் மூழ்கி பலி

காயல்பட்டினத்தில் கடலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி இவரது மகள் பிரியதர்ஷினி (13). இவர் காயல்பட்டினத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை உறவினரான 2 சிறுமிகளுடன் காயல்பட்டினம் கடலில் குளிக்க சென்றனர். அப்போது பிரியதர்ஷினி நீச்சல் தெரியாததால் கடலுக்குள் சென்று விட்டார்.

அங்கிருந்த மீனவர்கள் சிறுமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதற்குள் பிரியதர்ஷினி இறந்து விட்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் சம்பவ இடத்திற்கு சென்று பிரியதர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story