பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளி கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளி கைது

கைது செய்யப்பட்டவர் 

சங்ககிரியில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பக்க நாடு குண்டமலைகாடு பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கிளியோபட்ரா( 16) என்பவர் ஆடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாய் தந்தை இல்லாததால் தனது பாட்டியான சரஸ்வதி அரவணைப்பில் மாணவி வளர்ந்து வந்துள்ளார்.இதனிடையே பாட்டி சரஸ்வதி கூலி வேலைக்கு செல்வதால் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் மாணவி அருகில் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரப்பன் என்ற கூலி தொழிலாளியுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கூலித்தொழிலாளி வீரப்பன் மாணவியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அடிக்கடி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த சம்பவம் அறியாத பாட்டி சரஸ்வதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனது பேத்தி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் தேடிய பொழுது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் தனது பேத்தியுடன் கூலித்தொழிலாளி வீரப்பன் பாலில் சீண்டரில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி வீரப்பனிடம் சண்டையிட்டு இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் வீரப்பனை கைது செய்ய தேடிய பொழுது அவர் தலைமரைவானார். இதனையடுத்து தலைமரைவான கூலி தொழிலாளி வீரப்பனை பிடிக்க தனிப்படை அமைத்து கூலி தொழிலாளி வீரப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story