பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

பைல் படம்

புதுக்கோட்டையில் காதலன் இறந்த விரக்தியில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்: பொன்னமராவதி தாலுகா திருக்களும்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு விவசாயி. இவரது 15 வயது மகள் திருக்களும்பூர் அரசு மேல்நிலைப்பள் ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு உத்திரத்தில் சுடிதார் துப்பட்டாவினால் தூக்குமாட்டிக்கொண்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர் .

விசார ணையில், மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பந்தபட்ட வாலிபரை சில மாதங்களுக்கு முன்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் மாணவி மனமுடைந்த நிலையில் காணப்பட்டதும், துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மாணவி இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story