அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு

பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பள்ளி மாணவன் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

திருச்சி, புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங். கடந்த 1 ம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்துமாத்திரைகளை தினசரி ஒன்றாக 30நாட்கள் சாப்பிட வேண்டும் என கூறிய நிலையிலிருந்த அன்றைய தினமே 10 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்று இரவே உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். தகவல் தெரிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story