பள்ளி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

பள்ளி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
பள்ளி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்
விருதுநகர் அருகே ஆர்எஸ்எஸ் முகாமிற்கு சென்ற பள்ளி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு- ஜானகி தம்பதியினரின் மகன் ஆகாஷ் 16, இவர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று இரவு காரைக்குடியிலிருந்து தாம்பரம் முதல் செங்கோட்டை வரை செல்லும் சிறப்பு ரயிலில் திருநெல்வேலி அருகே நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு செல்வதற்காக பயணம் செய்துள்ளார்.

இன்று காலை விருதுநகர் அருகே உள்ள மாத்த நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகே ரயில் சென்றபோது படிக்கட்டில் பயணம் செய்த ஆகாஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மாணவனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story