பள்ளி மாணவி மாயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளி மாணவி மாயமானது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்
நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (50). இவரது மகள் ஜெயசுபா (19). இவர் அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளி +2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்தவரை காணவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜசேகரன் நத்தம் போலீசில் புகாரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story