சிவகாசியில் விளையாடும் போது பள்ளி மாணவன் பலி

சிவகாசியில் விளையாடும் போது பள்ளி மாணவன் பலி
பலி
சிவகாசியில் வீட்டில் விளையாடும் போது துணி கழுத்தை இறுக்கியதில் பள்ளி சிறுவன் உயிர் இழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமாரபாண்டியன் அச்சகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காமேஷ் அருண்குமார்(12) கமலேஷ் வருண்குமார்(12) என்ற இரட்டை குழந்தைகளும்,சக்தி காவியாஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனர்.காமேஷ் அருண்குமார்,கமலேஷ் வருண்குமார் இருவரும் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

செல்வகுமார பாண்டியனும்,அவரின் மனைவியும் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்த கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது தொட்டிலுக்காக போடப்பட்டிருந்த துணி காமேஷ் அருண்குமார் கழுத்தில் எதிர்பாராதவிதமாக சுற்றி இறுக்கிய மயக்கமடைந்து கீழேவிழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிள்ளைகள், சத்தம் போட அக்கம் பக்கத்தினர் மயக்கமடைந்த நிலையில் கிடந்த காமேஷ் அருண்குமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள்,காமேஷ் அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடல்,உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story