மர்ம பூச்சி கடித்து பள்ளி மாணவி பலி

மர்ம பூச்சி கடித்து பள்ளி மாணவி பலி

இறந்த மாணவி

சங்ககிரியில் மர்ம பூச்சி கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மர்ம பூச்சி கடித்து 11ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது சங்ககிரி போலீசார் விசாரணை... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட வைகுந்தம் வெள்ளயம்பாளையம் சேவான்காடு பகுதியைச் சேர்ந்தவர்

கார்த்திக் ராஜா(39) விவசாயி. இவரது மகள் நிஷா (16), வைகுந்தம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு படித்து தேர்வு எழுதிவிட்டு தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜா நேற்று இரவு 1மணிக்கு அளவில் தனது விவசாய தோட்டத்தில் விளைவைத்த காய்கறிகளை திருச்செங்கோடு கொண்டு செல்ல அப்பாவிற்கு மாணவி நிஷா உதவி புரிந்து வழி அனுப்பி வைத்துள்ளார்.

அதனையடுத்து அதிகாலை கார்த்திக் ராஜாவின் அக்கா பூங்கொடி போன் செய்து நிஷா வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வலது காலில் ஏதோ மர்ம பூச்சி கடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக கூறியுள்ளார். உடனடியாக விரைந்து வந்த கார்த்திக் ராஜா தனது மகளை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்ககிரி அருகே விவசாய தோட்டத்தில் மர்ம பூச்சி கடித்து பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story