வெறி நாய் கடித்து பள்ளி மாணவிகள் காயம்

வெறி நாய் கடித்து பள்ளி மாணவிகள் காயம்

சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

சிங்கம்புணரியில் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெறிநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கம்புணரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த தெருநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளை கடித்தது. இப்பள்ளியில் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில மாணவிகள் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த நாய் ஒன்று 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளை கடித்துவிட்டு ஓடிவிட்டது. ஒரு மாணவிக்கு ரத்த காயமும், இன்னொருவருக்கு லேசான கீறலும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்த ஆசிரியர்கள் மாணவிகளை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பேரூராட்சி நிர்வாகம் நகரில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளி வளாகத்திற்குள் நாய்கள் நுழையாதவாறு காம்பவுண்ட் சுவர், சல்லடை கம்பி கொண்ட நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

Tags

Next Story