நெமிலி அருகே குடிக்க பணம் தராத நண்பனுக்கு கத்தரிக்கோல் குத்து

நெமிலி அருகே குடிக்க பணம் தராத நண்பனுக்கு கத்தரிக்கோல் குத்து

பைல் படம் 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38) கூலி வேலை செய்கிறார். அதேபோல் அவருடைய நண்பர் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (29) இருவரும் பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மது வாங்க சென்றுள்ளனர். இதில் பிரவீன் சுரேஷிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார் . பணம் இல்லை என சுரேஷ் கூறுகையில் ஆத்திரம் அடைந்த பிரவீன் அருகில் முடி திருத்தும் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சுரேஷ் நெஞ்சில் குத்தி உள்ளார். இதில் காயம் சுரேஷை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு விரைந்து வந்த போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மது வாங்க பணம் தராததால் நண்பனை கத்திரிக்கோலால் குத்திய பிரவீனை நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story