கடலூரில் சதமடித்த வெயில்

கடலூரில் சதமடித்த வெயில்

வெப்பம் (பைல் படம்)

கடலூரில் நேற்று 100. 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
கடலூரில் கோடை மழை பெய்து ஓய்ந்தது. இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கோடையை மிஞ்சும் வகையில் கடலூரில் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதலே வெயில் அதிகமாக இருந்தது. அதாவது காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் கடலூரில் நேற்று 100. 8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags

Next Story