தகிக்கும் வெயில் : போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கல்

தகிக்கும் வெயில் : போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கல்
கன்னியாகுமரியில் கோடை வெயிலை சமாளிக்க போலீசாருக்கு பழச்சாறு வழங்கப்பட்டது
கன்னியாகுமரியில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி காவல் நிலைய ரவுண்டானாவில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு தொடங்கி வைத்தாா். அப்போது, கன்னியாகுமரி உள்கோட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு, மோா் கோடை வெயிலின் தாக்கம் முடியும் வரை தொடா்ந்து வழங்கப்படும் என்றாா்.

Tags

Next Story