சாரணர், சாரணிய அமைப்பின் சார்பில் புத்தாக்க பயிற்சி

சாரணர், சாரணிய அமைப்பின் சார்பில் புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசுமேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சாரணர் அமைப்பின் புத்தாக்க பயிற்சியில் சாரண சாரணிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 90 பேர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யாறு கல்வி மாவட்ட சாரணர், சாரணிய அமைப்பின் சார்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வி மாவட்ட தலைவர் வக்கீல் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஜெயகாந்தன், உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் சையத் அப்துல் ஹிலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார்.

இப்பயிற்சியில் சாரண பயிற்சி ஆணையர் லோகநாதன் சாரணியத்தின் அடிப்படை தகவல்கள், பயிற்சிகள் மற்றும் கட்டமைப்பு குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் தலைமை ஆசிரியர் மார்கபந்து, பிரபாவதி, ஆணையாளர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் செல்வராஜ், தேவி, பயிற்சி ஆணையர் காந்திமதி, ஆலோசகர் விநாயகமூர்த்தி, இளைஞர் குழு திருமுருகன், லோகநாதன் உள்ளிட்ட சாரண சாரணிய ஆசிரியர்கள் 90 பேர் பங்கேற்றனர். முடிவில் துணை செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.

Tags

Next Story