போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன்கள் சதீஸ்(வயது 31), வினேஷ் (28). கட்டிட தொழிலாளர்களான இவர்களுக்கிடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. வினேஷ் தகாத வார்த்தையால் திட்டி பைக் சாவியால் சதீஸின் வலது கழுத்து, பின்னந்தலை ஆகிய பகுதியில் குத்தி காயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதியினர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், சம்பவ இடம் விரைந்து சென்றார். அவர் வினேஸை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வினேஸ், தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸை வெட்டினார்.இதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசு பணி செய்யாவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வினேஷ் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சதீசும் ஒரு புகார் கொடுத்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story