மணப்பாறை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

மணப்பாறை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கைது செய்யப்பட்டவர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூா் கோயிலில் ஆடு தோலுரிக்கும் தொழில் போட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வீரப்பூா் கோயிலில் கிடாய் வெட்டி தோலுரித்து கறி வெட்டிக் கொடுக்கும் வேலை செய்து வந்தவா்கள் வீ.பூசாரிப்பட்டியை சோ்ந்த கந்தசாமி மகன் மகாமுனி(37), நடராஜன் மகன் முருகேசன்(27). இவா்கள் இருவரிடையே தொழில்போட்டியில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் கறி வெட்டும் அரிவாளால் முனியப்பன் முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முனியப்பன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இது குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.

Tags

Next Story