கெங்குவார்பட்டி அருகே வழி பிரச்சனையில் அரிவாள் வெட்டு
![கெங்குவார்பட்டி அருகே வழி பிரச்சனையில் அரிவாள் வெட்டு கெங்குவார்பட்டி அருகே வழி பிரச்சனையில் அரிவாள் வெட்டு](https://king24x7.com/h-upload/2024/06/30/568014-image3a1000578225.webp)
காவல் நிலையம்
கெங்குவார்பட்டி அருகே பாதப் பிரச்சனையில் அரிவாள் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கெங்குவார் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபு இருதரப்பினரிடையே வீடுகளுக்கு செல்வதற்கு பாதை காரணமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனை காரணமாக பிரபு பழனிச்சாமி மகள் மருதுவை பைப்பினால் அடித்துள்ளார்.
அதனை தடுக்க வந்த பழனிச்சாமியை பிரபு அறிவாளால் வெட்டினார். இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
Next Story