விழுப்புரம் அருகே வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு

விழுப்புரம் அருகே வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு

பைல் படம் 

விழுப்புரம் அருகே வாக்குவாதம் முற்றிய நிலையில் வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எரளூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 22). இவரது சித்தப்பா விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி பள்ளிக் கூடம் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் சுரேஷ் (42). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பினார்.

இதையடுத்து அவரை சந்தித்து நலம் விசாரிக்க ஆனந்தராஜ் சுரேசின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ஆனந்தராஜியின் கழுத்து மற்றும் காது பகுதியில் வெட்டினார். படுகாயமடைந்த, ஆனந்தராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.


Tags

Read MoreRead Less
Next Story