எஸ் டி பி ஐ மாநாடு -முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பு.

எஸ் டி பி ஐ கட்சி நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு கட்சி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் "வெல்லட்டும் மத சார்பின்மை பாதுகாப்பு" என்ற தலைப்பில் மாநாடு வருகிற 2024 ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கிறது. எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்டர் மார்க், மாவட்ட துணை தலைவர் ஜாபர் அலி, மாவட்ட பொது செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக்தீன், நகர துணைத் தலைவர் கஜா மைதீன், SDTU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி, பள்ளப்பட்டி நகர செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் மற்றும் கரூர் பள்ளப்பட்டி நகர நிர்வாகிகள் உடனே இருந்தனர்.

Tags

Next Story