பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

குளிர்பானங்கள் வழங்கல் 

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வாகைக்குளம் வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா நேற்று (மார்ச் 3) மாலை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பக்தர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கினர். இதனை புறநகர் மாவட்ட பொருளாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். இதில் எஸ்டிபிஜ கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story