தேசியக்கொடி ஏற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்

தேசியக்கொடி ஏற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்

குடியரசு தின விழா 

நெல்லை எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தினம் குறித்த சிறப்புரை வழங்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் மாவட்ட பொது செயலாளர் கனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா குடியரசு தின சிறப்புகளை குறித்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மூவர்ண தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மேலப்பாளையம் வடக்கு பகுதி தலைவர் ஹக்கி மூசா காஜா, துணை தலைவர் சலீம்தீன், தெற்கு பகுதி தலைவர் மைதீன் பாட்ஷா, செயலாளர் யூசுப், பொருளாளர் பக்கீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் யூசுப் பாஷா, நிர்வாகிகள்,அகமது,தமீம், உமர் தீன்,பாஷா, கலந்து கொண்டனர்.

Tags

Next Story