மண்டல அலுவலகத்தில் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்

மண்டல அலுவலகத்தில் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்

எஸ்டிபிஐ மனு 

52வது வார்டு பகுதியில் சாலையை சரி செய்யவும், டெங்குவை தடுக்க கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் 52வது வார்டு தலைவர் தமிழ் அன்சாரி தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.அந்த மனுவில் 52வது வார்டு பகுதிகளில் சாலை வசதிகள் சரி செய்யவும் மற்றும் டெங்குவை தடுக்க கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story