போலி மருத்துவரின் கிளினிக்கிற்கு சீல்

போலி மருத்துவரின் கிளினிக்கிற்கு சீல்
 கிளினிக்கிற்கு சீல் வைப்பு (ஜெயராமன்)
பாவூர் சத்திரம் அருகே சிவகாமிபுரம் விலக்கில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவரின் கிளினிக்கிற்கு சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது. மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர்

. இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது. அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story