விருதுநகர் மாவட்டத்தில் 16 பெட்டிகடைகளுக்கு சீல்

விருதுநகர் மாவட்டத்தில் 16 பெட்டிகடைகளுக்கு சீல்

மாவட்ட ஆட்சியர் 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு,16 பெட்டிக்கடைகள் சீல்வைக்கப்பட்டு ரூ.4 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில் (19.05.2024 முதல் 25.05.2025 வரை) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர். அதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் எடையுள்ள ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக 16 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.4 லட்சம்; அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.;

3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) தெரிவித்துள்ளார்.

Tags

Next Story