விதிமுறைகளை மீறிய பட்டாசு கடைகளுக்கு சீல் வைப்பு

சிவகாசியில் விதிமுறைகளை மீறிய பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 17ஆம் தேதி 2 இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைகளில் விதி களை மீறி செயல்பட்டதால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை கள் மற்றும் பட்டாசு கடைகளில் விதிகளை மீறி செயல்படுகிறதா என வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் உள்ள பட்டாசு கடைகளில் திருச்சுழி தாலுகா தனித் தாசில்தார் சிவக்குமார் தலைமை யிலான குழுவினர் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விமலா என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து விமலா என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். சீல் வைக்கப்பட்ட பட்டாசு கடையில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story