பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் விடுதிகளுக்கு சீல்

பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் விடுதிகளுக்கு சீல்


மேட்டுபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டேஜ் ஒன்றில் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.


மேட்டுபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டேஜ் ஒன்றில் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை:மேட்டுபாளையம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தனியாருக்கு சொந்தமான காட்டேஜ் ஒன்றில் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தனியார் விடுதியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் பெண் உட்பட மூவரை கைது செய்த போலீசார் மீட்கபட்ட மூன்று பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் இரண்டு விடுதிகளுக்கு சீல் வைத்தார்.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபடும் என காவல்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story