போதைப்பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல் - எஸ். பி எச்சரிக்கை

போதைப்பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல் - எஸ். பி எச்சரிக்கை
விழுப்புரம் எஸ். பி சஷாங்க் சாய்
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லிப் போன்ற போதைப்பொருட்கள் விற் பனை தொடர்பாக காவல்துறையினரால் அதிரடி சோதனை நடத் தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு சம்பந்தப் பட்ட கடை உரிமையாளர், விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பெட்டிக்கடை கள் உள்ளிட்ட கடைகளை வருவாய்த்துறை மற்றும் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் மூலம் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது, ஆகவே மாவட்டத்தில் யாரேனும் போதைப்பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக 9363616100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story