சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புகையிலை பொருள்களை விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்த நபர்கள் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் தலைமையில் போலீசார் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 நபர்களின் கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story