புகையிலை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு சீல்

புகையிலை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு சீல்

கோப்பு படம் 

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகள், பெட்டிக்கடைகள் அனைத்தும் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் இணைந்த சிறப்பு குழுக்கள் சோதனை மேற்கொண்டனர். பான் மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 26 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணி திருவாரூர் மாவட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா, புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story