புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஈடுப்பட்ட சோதனையில் 200க்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெம்மாவூர் பகுதியில் பாண்டிச்செல்வன், சந்தானஜோசப், சின்னமணி ஆகியோர் நடத்தி வரும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் உடையாளிப்பட்டி போலீசார் சோதனை மேற் கொண்டனர். அப்போது கடைகளில் இருந்து 200க்கும் அதிகமான புகையிலை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் கொப்பம்பட்டியில் ஜாபர்அலி என்பவரது கடையில் எஸ்பி தனிப்பிரிவு பாலமுருகன் தலைமையிலான போலீசார் மேற் கொண்ட சோதனையில் கடையிலிருந்து 15.கிலோ எடை உள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ15 ஆயிரம் ஆகும். அவரது கடைக்கும் சீல் வைத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story