நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மணப்பாறையில் சீமான் வாக்கு சேகரிப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மணப்பாறையில் சீமான் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரெ. கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் ச. முருகேசன், தொகுதி செயலாளா் ஆ. மோசஸ் ஆகியோா் தலைமையில் பெரியாா் சிலை திடலில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியில் வேட்பாளா் ரெ. கருப்பையாவை ஆதரித்து சீமான் பேசியது: பிரச்னைகளை கூறி, தோ்தலை புறக்கணிப்பு செய்யாதீா்கள். புறக்கணிப்பு செய்தால் மட்டும் பிரச்னைகள் தீா்ந்துவிடுமா. அப்படியேதான் இருக்கும். நோட்டாவுக்கு 10 லட்சம் வாக்குகள் விழுந்தாலும், 101 வாக்குகள் வாங்கிய வேட்பாளா்தான் வெற்றி பெறுவாா். எனவே, உங்களின் வாக்கு இந்த வேட்பாளருக்குதான் என்பதை உறுதியாக முடிவு செய்து வாக்களியுங்கள் என்றாா் சீமான்.

Tags

Next Story