தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் மாதிரி ஒத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம்!

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் மாதிரி ஒத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம்!

ஒருங்கிணைப்பு கூட்டம்

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்புப்படை உதவி தலைவர் ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் டீம் கமாண்டர், பாதுகாப்பு அலுவலர், மதிப்பீடு அணியினர், தேடுதல் மற்றும் வெட்டுதல் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொடர்பு அலுவலர்கள்,கயிறு மூலம் மீட்புப் பணி அணியினர் என 30-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மாதிரி ஒத்திகை பயிற்சி நாளை (30.05.2024) காலை 9.30 மணியளவில் எர்ணாபுரம் சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று (29.5.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியின்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட நபரை கேமரா மூலம் கண்டறிவது, சுவற்றில் சுழலும் மீட்பு கருவிகள், துளையிட்டு மீட்கும் பணிகள், உயரமான கட்டிடத்தில் சிக்கிய நபரை கயிறு மற்றும் ஸ்டெச்சர் மூலம் மீட்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நேரடியாக செய்து காண்பிக்கப்பட உள்ளன. மேலும் மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது, தொடர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் குறித்தும் செயல்முறை விளக்கம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் மூலம் செய்து காண்பிக்கப்பட உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினரின் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு உபயோகப்படுத்தும் நவீன உபகரணங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட உள்ளன. மேலும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி தலைவர் திரு.ஸ்ரீதர் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story