உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

தரகம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

தரகம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர். "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் மூலம், பொது சேவையை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு தேவையான சேவைகளை உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் மூலம் பொது சேவையை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசின் திட்டங்கள் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமையில் குறிப்பிட்ட ஒரு தாலுகாவில் 24 மணி நேரமும் செலவிட வேண்டும். பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், உள்கட்டமைப்பை ஆய்வு செய்யவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகப் புரிந்துகொள்ளவும் இந்த பணிகள் அமையும்.

இதன் அடிப்படையில் இன்று கடவூர் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தார். பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Tags

Next Story