குற்றாலத்தில் சீசன் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


குற்றாலத்தில் சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலையில் தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story