செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்

செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்
செய்யூர் பஜார் வீதியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு, தினசரி நுாற்றுக்கணக்கானோர், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், சொத்து மதிப்புச்சான்று பெறுதல், நில அளவைக்கு பதிவு செய்தல், பட்டா பெயர் மாற்றம் என, பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, சில ஆண்டுகளுக்கு முன், 21 பேர் அமரும் வகையில், ஏழு இருக்கைகள் அமைக்கப்பட்டன.

இதில், இரண்டு இருக்கைகள் சேதமடைந்து உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்துவது இல்லை. தற்போது, ஐந்து இருக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர போதிய இருக்கைகள் இல்லாததால், தரையில் அமர்ந்தும், இருசக்கர வாகனங்கள் மீது அமர்ந்தும் அல்லது நீண்டநேரம் நின்று கொண்டு இருக்கும் சூழல் உள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பழுதடைந்த இருக்கைகளை சீரமைத்து, கூடுதல் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story