வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்

  நாகப்பட்டினத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டார்.

நாகப்பட்டினத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் 29.நாகப்பட்டினமாதனர் பாராளுமன்ற தொகுதியல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி பாராளுமன்ற தேர்தல் 19.04.2024 அன்று தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் 163.நாகப்பட்டினம், 164.கீழ்வேளுர்(தனி) மற்றும் 165.வேதாரணயம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தின் 166 திருத்துறைப்பூண்டி(தனி), 168.திருவாரூர், 169.நன்னிலம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும் ஆக மொத்தம் 06 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. 29.நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

163.நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு 1090 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 164.கீழ்வேளுர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 203 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களுக்கு 994 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 165.வேதாரணியம் ஈட்டமன்ற தொகுதியில் 127 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு 1106 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட 165.வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இப்பயிற்சி வகுப்பில் வாக்குபதிவு நாளுக்கு முந்தையநாள் மேற்க்கொள்ளபட வேண்டிய பணிகள், வாக்குச்சாவடிக்கு உள்ளே, வெளியே மேற்க்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்குவதற்க்கு முன்பாக செய்யவேண்டிய பணிகள், வாக்குப்பதிவின்போது செய்யவேண்டிய பணிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்முறை, ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தோதல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆலங்குடி முதல் திருத்துறைப்பூண்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி மற்றும் பரவையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வேதாரண்யம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் திருமால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story