இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்லில் இடை நிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி எண் 311 யை நிறைவேற்ற கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடைநிலை பதிவு ஆசிரியை இயக்கத்தின் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதியின் 311 நிறைவேற்ற கோரி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர் கைது செய்ததை கண்டித்தும் விரிவாக சம ஊதிய வழங்கக் கோரியும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தென்றல் இசைவாணன் தலைமை வகித்தார். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story