அறிவு சார் மையத்தினை ஆய்வு செய்த முதன்மைச் செயலாளர்
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் அறிவுசார் மையத்தினை அரசு முதன்மை செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி நகராட்சியில் சந்தப்பேட்டை பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி இஆப. முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது. தருமபுரி நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story