பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் !

பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்  !

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணிகள் விறு விறுப்படைந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வரக்கூடிய பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தனி அறையில் இறக்கி வைக்கப்பட்டு அனைத்து கட்சியினர் முன்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு 514 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story