செக்யூரிட்டி கொலை வழக்கு: 3 பேரிடம் தீவிர விசாரணை 

செக்யூரிட்டி கொலை வழக்கு: 3 பேரிடம் தீவிர விசாரணை 
பைல் படம்
நாகர்கோவிலில் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர் நாக்கால்மடம் விலக்கு அருகே உள்ள நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். பிரபாகரன் கடந்த 10-ம் தேதி தனது பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனையில் பிரபாகரன் கழுத்து மற்றும் தலையில் வெட்டுக்காயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுசீந்திரம் போலீசார் பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரனை பைக்கில் வந்தவர்கள் வெட்டி கீழே தள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை சம்மந்தமாக நாகர்கோர் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story