காட்டுவனஞ்சூரில் சீத்தா கல்யாண உற்சவம்

காட்டுவனஞ்சூரில் சீத்தா கல்யாண உற்சவம்

 சீத்தா கல்யாண உற்சவம் 

காட்டுவனஞ்சூரில் சீத்தா கல்யாண உற்சவம்
சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் சீத்தா கல்யாண உற்சவம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் 45ம் ஆண்டு சீதா கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று காலை உஞ்சுவர்த்தியும் அதனை தொடர்ந்து சீதா கல்யாண வைபவம் ஸ்ரீவாஞ்சியம் முரளி பாகவதர் குழுவினரால் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.

Tags

Next Story